search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேந்திர பாலாஜி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவு.
    • மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தகவல்.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி அளவில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இதைதொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்கள் செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால், வெளிநாடு செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • ராஜேந்திர பாலாஜியின் தந்தை மு. தவசிலிங்கம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
    • பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் தந்தை மு. தவசிலிங்கம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில், தந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், தவசிலிங்கம் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக வழக்கு.
    • விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருவதாகவும், எனவே அந்த விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 6 மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெறும்படியும் உத்தரவிடப்பட்டது.

    • தி.மு.க. விளம்பர ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
    • தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஸ் நிலையம் அருகே விருதுநகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழுக்கு மரியாதை செய்தவர் தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் விருதுநகர் சங்கரலிங்க நாடார். உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத்தை மதித்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் அண்ணா. கருணாநிதி தனது குடும்ப நலனுக்காக கட்சியை கைப்பற்றினார். தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலினை சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை.

    சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.379 கோடியில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி, ரூ447 கோடியில் விருதுநகர்-அருப்புக்கோட்டையில் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், வத்திராயிருப்பில் புதிய தாலுகா அலுவலகம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பல கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டது. ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி உள்ளது. தி.மு.க. ஆட்சி விளம்பர ஆட்சி. இது நிரந்தரமாகாது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும். நீங்கள் அ.தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயி னார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன், யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம்.
    • ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தனக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவரது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உள்ளது.

    ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    அதே நேரத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்ல ராஜேந்திர பாலாஜி அனுமதி கேட்டதற்கு சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜவர்மன் என்பவரை கொல்ல முயன்றதாகவும் புகார் உள்ளது.

    இந்த நிலையில் போலீஸ் தன்னை கைது செய்துவிடக்கூடாது என்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி.

    ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ராஜேந்திர பாலாஜி மீது மோசடி மட்டுமின்றி, கொலை முயற்சி புகாரும் உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 24-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ×